Friday, 13 May 2016

தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக திரு பி. ஏ. தனஞ்சயன் பொறுப்பேற்பு


திரு  பி.ஏ. தனஞ்சயன் அவர்கள் இன்று (13.05.2016) தெற்கு  ரயில்வேயின்  தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக திரு. டி. லட்சுமணன் அவர்களிடமிருந்து  பொறுப்பேற்றுக்  கொண்டார்.   திரு.  லட்சுமணன் அவர்கள்  தெற்கு ரயில்வே தலைமை வணிகமேலாளர்  அவர்களது  சிறப்பு அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


திரு  பி.ஏ. தனஞ்சயன், அவர்கள் தெற்கு  ரயில்வேயின்  தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக  பொறுப்பேற்கு முன்னர் தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளராகப் பணியாற்றி வந்தார்.  இவர் மக்கள்தொடர்பு, விளம்பரம் மற்றும் சுற்றுலா, மற்றும் பத்திரிக்கைத் துறைகளில் முதுநிலைப் பட்டங்கள் பெற்றவர். தெற்கு ரயில்வேயில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.  

No comments:

Post a Comment