Friday 5 January 2018

01.02.2018 முதல் 31 நாட்களுக்கு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள நீலகிரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் வசதிக்காக கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே இலவச பேருந்து வசதி

 
மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை 23 ரயில்பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பது தொடர்பான பணிகளுக்காக 01.02.2018 முதல் 03.03.2018வரையிலான 31 நாட்களுக்கு ரயில் எண்.12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி விரைவு ரயில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயம்புத்தூரில் வந்து இறங்கி மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ள முன்பதிவு செய்துள்ள பயணிகளின் வசதிக்காக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களின் உத்தரவின் பேரில் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே பயணம் செய்ய இயலும். இதற்காக தனிக்கட்டணம் ஏதும் அவர்கள் செலுத்த வேண்டியது இல்லை. இது குறித்து உதவி தேவைப்படும் பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலைய உதவி வணிக மேலாளர் அவர்களை 96009 56236 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளை நீட்டிப்பதன் மூலம் தற்போது நீலகரி ரயிலின் பெட்டிகளின் ஒரு பகுதி கோயம்புத்தூரில் நிறுத்த வேண்டிய தேவை இருக்காது. அனைத்துப் பெட்டிகளும் மேட்டுப்பாளையம் வரை சென்று திரும்பும் என்பது குறிப்பிடத் தக்கது. 

No comments:

Post a Comment