Friday 15 December 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2017ம் ஆண்டுக்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம்

 
DRM addressing the gathering
 Sri S. Thirumurugan, DPO welcoming the gathering
Pensioners and beneficiaries gathered in the Adalat

இந்திய ரயில்வே ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை தீர்ப்பதற்கு ஆண்டில் இருமுறை குறைதீர்ப்பு மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம் இன்று (15.12.2017) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இம் மன்றத்தில் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா தலைமை ஏற்றார்.  62ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த மன்றத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர். சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன்மற்றும் இதர கோட்ட  அதிகாரிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா, இந்திய ரயில்வேயில் குறிப்பாக சேலம் கோட்டத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலனில் முழு கவனம் செலுத்தி அவர்களது குறை தீர்க்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு தேவையான கவனம் செலுத்தி வரும் சேலம் கோட்ட பணியாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். 

மொத்தம் 62 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதில், 35 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு, 48,05,333 ரூபாய் நிவாரணமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  இதர மனுக்கள் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு புறம்பாக இருந்ததாலும்  போதிய ஆவணங்கள் இல்லாததாலும், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை.


குறை தீர்ப்பு மன்றத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் சேலம் கோட்ட நிர்வாகம் தங்களது குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

No comments:

Post a Comment