Monday 24 October 2016

ஜோலார்பேட்டை சேலம் இடையே பயணிகள் ரயிலில் இன்று (24.10.2016) திடீர் பயணச்சீட்டு பரிசோதனை



ஜோலார்பேட்டை சேலம் இடையே ஜோலார்பேட்டை ஈரோடு பயணிகள் ரயிலில் இன்று (24.10.2016)  திடீர் பயணச்சீட்டு பரிசோதனை சேலம் கோட்ட வணிகவியல் துறையின் ஒருங்கிணைப்பு மேலாளர் திரு விஜு வின் அவர்கள் தலைமையில் சுமார் 20 வணிகவியல் துறை பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் 31 ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 பேர் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்டனர். அவர்களிடம் 15,390 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.  இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் சேலம் கோட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 137 ன் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் சென்னையில் உள்ள ரயில்வே குற்றவியல் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது 1000 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக பெற்றுத்தரப்படும் என்றும் வணிகவியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Thursday 13 October 2016

சேலம் ரயில்நிலையத்தில் உள்ள நடைமேம்பாலத்தின் மறுபுறம் 5ம் நடைமேடை படிக்கட்டுகள் மூடல்


சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்க முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 14.10.2016 முதல் 27.10.2016 வரை சேலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தின் மறுபுறம், 5ம் நடைமேடை அருகே உள்ள படிக்கட்டுகள் மூடப்பட உள்ளன, எனவே, பயணிகள் இந்த காலகட்டத்தில் தற்போது உள்ள சுரங்கப்பாதையை 5ம் நடைமேடை சென்று வர உபயோகித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Friday 7 October 2016

நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் இயக்கத்தில் 01.10.2016 முதல் 10.11.2016 வரை மாற்றம்


மதுரை விருதுநகர் இடையே ரயில்தட பராமரிப்பு பணிகள் காரணமாக, 01.10.2016 முதல் 10.11.2016 வரை (வியாழக்கிழமை நீங்கலாக) ரயில்எண் 56319 நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் 57 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.07 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைவதுடன், கோயம்புத்தூர் ரயில்நிலையம் சென்று சேரும் வரை தாமதமாக இயங்கும். அதே போல், ரயில்எண் 56320 கோயம்புத்தூர் நாகர்கோவில் பயணிகள் ரயில் 44 நிமிடங்கள் தாமதமாக இரவு 07.09  மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையம் சென்றடைவதுடன், நாகர்கோவில் ரயில்நிலையம் சென்று சேரும் வரை தாமதமாக இயங்கும்.