Tuesday 28 March 2017
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்டது
Wednesday 22 March 2017
23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையை 23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம் திரு கே.ஏ. மனோஹரன் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார். இணை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு. ஈ. ஸ்ரீனிவாஸ், தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு தலைமை நிர்வாக அலுவலர் திரு. எல். சுதாகர ராவ், தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு தலைமைப் பொறியாளர் திரு. பிரபுல்ல வர்மா, தெற்கு ரயில்வே தலைமை சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பொறியாளர் திரு. எல். இளவரசன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் திரு நரேஷ் லால்வானி, போத்தனூர் கட்டுமானப் பிரிவு இணைத் தலைமைப் பொறியாளர் திரு. ஆர், ராமகிருஷ்ணன், ஆகியோருடன், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், சேலம் கோட்டம், மற்றும் பாலக்காடு கோட்ட அதிகாரிகள், ஆய்வின் போது, அவருடன் பங்கேற்கிறார்கள்.
23.03.2017 அன்று காலை சுமார் 10.30 மணி முதல் மதியம் 3.00 மணிக்குள் பொள்ளாச்சி கிணத்துக்கடவு இடையேயும், 24.03.2017 அன்று காலை சுமார் 10.30 மணி முதல் மதியம் 2.00 மணிக்குள் கிணத்துக்கடவு பொள்ளாச்சி இடையேயும் மோட்டார் டிராலி மூலம் தடத்தை அவர் ஆய்வு செய்வதுடன், 24.03.2017 அன்று மதியம் சுமார் 03.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் போத்தனூர் பொள்ளாச்சி இடையேயும் டீசல் எஞ்சின் மற்றும் ரயில்பெட்டிகள் மூலம் இத் தடத்தில் அவர் வேகப்பரிசோதனை செய்ய உள்ளார். எனவே இக்குறிப்பிட்ட நேரங்களில் பொது மக்கள் ரயில்தடம் அருகே செல்லாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொள்ளாச்சி போத்தனூர் இடையிலான சுமார் 40 கிமீ தொலைவு கொண்ட பழைய மீட்டர் கேஜ் ரயில்பாதை தற்போது சுமார் 340 கோடி ரூபாய் செலவில் அகலப்பாதையாக 2010ல் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடுமையான பாறைகள் நிறைந்த மலைப்பாதையில் சுமார் 4 கிமீ தூரத்திற்கு கடினமான சூழலில் ரயில்தடம் போடப்பட்டுள்ளது. இத்தடத்தில் தரைமேம்பாலம், மற்றும் தரைக்கீழ்ப்பாலம் உள்பட மொத்தம் 110 ரயில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் முன்பு இருந்த 37 லெவல் கிராசிங் கேட்டுகளில் பெரும்பலானவை மூடப்பட்டு தற்போது 14 லெவல் கிராசிங்குகள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் இன்னும் மூன்று மாதகாலத்திற்குள் மேலும் 4 லெவல் கிராசிங்குகளை மூட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் புதிய அகல ரயில் பாதையால் கோயம்புத்தூர், இதர தெற்கு நகரங்களான பழனி, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டு இந்த இடங்களுக்கு செல்லும் பயண நேரம் பெருமளவில் குறைக்கப்பட வழி வகுக்கப்பட்டுள்ளது.
Wednesday 1 March 2017
சேலம் கோட்ட ரயில்களில் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை
சேலம் கோட்ட ரயில்களில் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை
பசுமை ரயில் தடங்களை நாடெங்கிலும் உருவாக்கும் ரயில்வே அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்புக்கூடத்தில் தற்போது முதன்மைப் பராமரிப்பில் உள்ள சேரன்/நவஜீவன் விரைவு ரயில், கோயம்புத்தூர் சென்னை நகரிடை இன்டர்சிட்டி ரயில், கோயம்புத்தூர் மன்னார்குடி செம்மொழி விரைவு ரயில், கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில், கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு ரயில் போன்ற பல ரயில்களில் தற்போதுள்ள கழிவறைகளை மாற்றி உயிரிக் கழிவறைகளாக அதாவது பயோடாய்லட்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 35 ரயில்பெட்டிகளில் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக, புனேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து 2 கட்டங்களாக அதாவது 30/12/2016 அன்றும் 12.02.2017 அன்றும், (35 ரயில்பெட்டிகளுக்கு பெட்டிக்கு 4 பயோ கழிவறைகள் வீதம்) 140 பயோ கழிவறைகள் ரயில்வே வாரியத்தில் இருந்து சேலம் கோட்ட கோவை ரயில்பெட்டி பணிமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளன.
ஒரு ரயில்பெட்டியில் தற்போதுள்ள 4 கழிவறைகளையும் மாற்றி அவற்றில் பயோடாய்லட் பொருத்துவதற்கு குறைந்த பட்சம் 2 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதால், இயக்கத்தில் உள்ள ரயில்பெட்டிகளை நிறுத்தி அவற்றில் இப்பணிகளை மேற்கொள்ள இயலாது. எனவே, உதிரியாக அதாவது spare என்று சொல்லப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே ஒன்றன் பின் ஒன்றாக இவற்றை பொருத்த முடியும். இதுவரை 15 ரயில்பெட்டிகளில் இவை பொருத்தப்பட்டுள்ளன. மார்ச் 25க்குள் இவை அனைத்தும் மீதமுள்ள ரயில்பெட்டிகளிலும் பொருத்தி முடிக்கப்பட்டு விடும்.
ஒரு ரயில்பெட்டியில் 4 உயிரிக்கழிவறைகள் பொருத்த அனைத்து செலவுகளும் உட்பட சுமார் 4,13,000 ரூபாய்கள் செலவாகும்.