இடமிருந்து வலம்: சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு, மாண்புமிகு பாராளுமன்ற துணை சபாநாயகர் முனைவர் எம்.தம்பிதுரை, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ். ஜெயந்தி
கரூர் ரயில்நிலையத்தின் முகப்புத் தோற்றம்
குளிர் வசதி செய்யப்பட்ட பயணிகள் தங்கும் அறை
குளிர் வசதியற்ற சாதாரண பயணிகள் தங்கும் அறை
பயணிகள் தங்கும் அறை கட்டணம் மற்றும் தங்கியுள்ளோர் விபரப் பலகை
மாண்புமிகு பாராளுமன்ற துணை சபாநாயகர் முனைவர் எம்.தம்பிதுரை அவர்கள் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்
மாண்புமிகு பாராளுமன்ற துணை சபாநாயகர் முனைவர் எம்.தம்பிதுரை அவர்கள் தானியங்கி பயணச் சீட்டு இயந்திரத்தை பார்வையிடுகிறார்
கரூர்
ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகளை மாண்புமிகு நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் எம். தம்பிதுரை அவர்கள் இன்று
(26.12.2015), சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ். ஜெயந்தி, மற்றும் பல முக்கியஸ்தர்கள்
முன்னிலையில் திறந்து வைத்தார்
தங்கும்
அறைகளை திறந்து வைத்த பின்னர் அந்த அறைகளை பார்வையிட்டதுடன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்
திரு. சுப்ரான்சு அவர்களுடன், கரூரில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து
விவாதித்தார். அப்போது அவர் தான் மாண்புமிகு
மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு
அவர்களை சந்தித்து, கரூரை மற்ற முக்கிய இடங்களுடன் இணைக்கும் வகையில், கீழ்க்கண்ட ரயில்களை
இயக்க கோரிக்கை வைத்ததாகவும், ரயில்வே அமைச்சரும் அவற்றை நிச்சயம் பரிசீலித்து ஆவன
செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சேலம்
தஞ்சாவூர் பயணிகள் ரயில் – நாமக்கல் கரூர் திருச்சி வழியாக
சேலம்
மதுரை பயணிகள் ரயில் – கரூர் திண்டுக்கல் வழியாக
கரூர்
கோயம்புத்தூர் பயணிகள் ரயில் – ஈரோடு திருப்பூர்
வழியாக
கரூர்
சென்னை விரைவு ரயில் – சேலம் ஜோலார்பேட்டை
வழியாக
பின்னர்
டாக்டர் தம்பிதுரை அவர்கள் புதியதாக கரூர் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதி நவீன
நாணயம், ரூபாய் நோட்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு மூலம் இயங்கும் தானியங்கி பயணச்சீட்டு
இயந்திரங்களை பார்வையிட்ட போது, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள்
இந்த இயந்திரங்கள் பயணிகள் கூட்ட நெரிசலின் போது எளிதாக பயணச்சீட்டு வாங்க உதவும் என்று
தெரிவித்தார். கரூர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக சேலம் ரயில்வே கோட்டம்
மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் தம்பிதுரை அவர்கள் பாராட்டு
தெரிவித்தார்.
கரூர்
ரயில்நிலையத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள 3 தங்கும் அறைகளில் 1 குளிர்வசதி கொண்டது,
மற்ற இரு அறைகள் சாதாரண குளிர்வசதியற்ற அறைகளாகும். இவை 35 லட்ச ரூபாய்கள் திட்ட மதிப்பீட்டில் கட்டி
நிறைவு செய்யப்பட்டுள்ளன. குளிர் வசதி அறைக்கு
12 மணி நேரத்திற்கு 400 ரூபாய்களும், 24 மணி நேரத்திற்கு 800 ரூபாய்களும், குளிர் வசதியற்ற
சாதாரண அறைக்கு 12 மணி நேரத்திற்கு 300 ரூபாய்களும், 24 மணி நேரத்திற்கு 600 ரூபாய்களும்
கட்டணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் விரைவிலேயே இணையதளம் மூலமாக முன்பதிவு
செய்ய வசதி செய்யப்படும்.
நிகழ்ச்சியின்
போது, சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு
கே.பி.தாமோதரன், சேலம் கோட்ட ஒருங்கிணைப்புப் பொறியாளர் திரு மா.விக்னவேலு, மற்றும்
இதர கோட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.