கூடுதல் கோட்ட மேலாளர், திரு ஆர்.எஸ்.சின்ஹா, கோட்ட மேலாளர், திரு.சுப்ரான்சு, திரு. பி. ஹரிகிருஷ்ணன்
பொக்லைன் இயந்திரங்கள் ஜல்லிகளை அகற்றும் பணியில்
பணியாளர்கள் பணித்தளத்தில்
மொர்ரம் மணல் (இடது) கரும்பஞ்சுக்களிமண் (வலது)
வைப்ரேட்டரி ரோலர் இயந்திரமும் (இடது) பொக்லைன் இயந்திரங்களும் (வலது) பணியில்
பொம்மிடி
மற்றும் புட்டிரெட்டிபட்டி இடையே சேலம் ஜோலார்பேட்டை மார்க்த்தில் உள்ள ரயில்தடத்தில்
வழக்கமான தட ஆய்வுகளின் போது, அங்குள்ள கரும்பஞ்சுக் களிமண் காரணமாக, மழை நீர் தேங்கி
ரயில்தடத்தின் ஸ்திரத்தன்மையை பாதித்து ரயில் இயக்கத்திற்கே ஒரு சவாலாக இருக்க வாய்ப்பு
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, சேலம்
கோட்ட பொறியியல் பிரிவு அந்த மண்ணை மலை உச்சிகிளில் இருந்து எடுக்கப்படும் மொர்ரம்
மணல் கொண்டு மாற்றி, ரயில்தடத்திற்கு திடத்தன்மை கொடுக்கவும், மழை நீர் தங்குவதை தவிர்க்கவும்,
ரயில் இயக்கத்தை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டது.
பொம்மிடியில்
இருந்து 6 கிமீ மற்றும் புட்டிரெட்டிபட்டியில் இருந்து 6 கிமீ தூரத்தில் சுமார்
1.5 கிமீ தொலைவு கொண்ட இந்த களிமண் பகுதியில் 25.11.2015 முதல் வேலை துவக்கப்பட்டு,
10.01.2016 அன்று நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 3 மணி 55 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும்
பணிகள், ஒரு நாளைக்கு 50 மீட்டர் என்ற கணக்கில் நடைபெறுகின்றன. 85 லட்சம் ரூபாய்கள்
செலவில் மேற்கொள்ளப்படும் இந்த பணியில் 3 பொக்லைன் இயந்திரங்களும் 1 வைப்ரேட்டரி ரோலர்
இயந்திரமும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
தெற்கு
ரயில்வேயில் இம்மாதிரி பெருமளவில் இது போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி இத்தகு பணிகள்
மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை. வழக்கமான
ரயில்களின் இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும்
இப்பணிகளில் ஓவ்வொரு நாளும் 45 மேற்பார்வையாளர்களும் பணியார்களும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று
(19.12.2015) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்கள் நேரில் பணிகள் நடைபெறும்
இடத்த சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு.ஆர்.எஸ்,சின்ஹா, கோட்டப்பொறியாளர்
திரு.எம். மாரியப்பன், கோட்டத் துணைப் பொறியாளர் திரு.எம்.பி.சீனிவாசன், கோட்டமுதுநிலை
இயக்க மேலாளர் திரு.பி.ஹரிகிருஷ்ணன், மற்றும் இதர கோட்ட அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பணிகளை மேற்பார்வையிட்ட திரு. சுப்ரான்சு அவர்கள்,
பணிகளை சிறப்பாக ரயில் இயக்கத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மேற்கொண்டு வரும்
சேலம் கோட்ட பொறியியல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment