|
புதியதாக திறக்கப்பட்ட புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் கட்டிடம் |
|
புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் உறுப்பினர்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி |
|
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் கொடியை ஏற்றிவைக்கிறார். |
|
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு உரையாற்றுகிறார் |
|
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு குத்துவிளக்கேற்றுகிறார் |
|
சேலம்
கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஏ.கலாநிதி குத்துவிளக்கேற்றுகிறார் |
|
சேலம்
கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.நரசிம்மம் குத்துவிளக்கேற்றுகிறார் |
|
அணிவகுத்து நிற்கும் புனித ஜான் ஆம்புலன்ஸ் படை உறுப்பினர்கள் |
புனித ஜான் ஆம்புலன்ஸ் படை நாடெங்கிலும்
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போது
பாதிக்கப்பட்டோருக்கு உதவி புரிய ஏற்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் விபத்து உதவி
மற்றும் மீட்புக்குழுவாகும்.
புதிய கட்டிட திறப்பு விழாவின் போது வரவேற்புரை
வழங்கிய சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஏ.கலாநிதி, புனித
ஜான் ஆம்புலன்ஸ் படையின் உறுப்பினர்களாக உள்ள 120 சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்கள்
நாடெங்கிலும் இயற்கைப் பேரழிவுகளின் போது பாதிக்கப்பட்டோருக்கு பெருமளவில் உதவி செய்து
வருவதாக தெரிவித்தார்.
விழாவில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற சேலம்
ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் உறுப்பினர்கள் நாடெங்கிலும் இயற்கை
சீற்றங்களின் போது மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மட்டுமன்றி தங்களின்
பணியிடங்களிலும் சிறந்த பணியாற்றி வருவதாக பாராட்டினார். சீரான பயிற்சி மற்றும் கூட்டு முயற்சிகளின்
காரணமாக, புனித ஜான் ஆம்புலன்ஸ் படை இது போன்று சிறப்பாக பணியாற்ற முடிகிறது
என்றும் சொன்ன அவர் ரயில்வே துறையில் பயணிகளுடன் நேரடியாக தொடர்புடைய முன்னிலைத்
தொழிலாளர்களான, பயணச்சீட்டு பரிசோதகர்கள், நிலைய மேலாளர்கள், ஏசி மெக்கானிக்குகள்,
பயணச்சீட்டு வழங்கும் ஊழியர்கள் போன்றோருக்கு புனித ஜான் ஆம்புலன்ஸ் படை மூலம்
முதலுதவி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதனால், வெளியில் இருந்து உதவி வரும் வரை
காத்திருக்காமல், பிரச்சினையில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக உதவ முடியும் என்றும்
சொன்னார்.
சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ
கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.நரசிம்மம், இதர சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் விழாவில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment