Monday 14 December 2015

சேலம் ரயில்வே கோட்ட மருத்துவமனையில் இன்று (14.12.2015) சருமம் மற்றும் தோல் பற்றிய ஆலோசனை முகாம்






சருமம் மற்றும் தலைமுடி இன்றைய நவீன உலகில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக உள்ளது. நாள்தோறும், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுப் பழக்கங்கள், போன்றவற்றால் இந்த பிரச்சனைகள் அதிகமாகி உள்ளதுடன், சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு தேவையான அளவுக்கு கவனம் தரப்படுவதில்லை.  

இத்தகு பிரச்சனைகள் பற்றி சேலத்தில் உள்ள  ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் மருத்துவப் பிரிவு கூடுதல் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் நரசிம்மம் அவர்களது மேற்பார்வையில், கோயம்புத்தூர்  டாக்டர் தாஜ் சரும மற்றும் தலைமுடி மருத்துவமனை மருத்துவர்கள் தாஜுதீன், பிரியதர்சினி, மற்றும் ஜோதி அவர்களது தலைமையிலான மருத்துவர் குழு இன்று (14.12.2015)  சேலம் ரயில்வே காலனியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் முகாம்  ஒன்றை நடத்தினார்கள்.  

இந்த சரும மற்றும் தலைமுடி மருத்துவ ஆலோசனை முகாமில் சுமார் 200 ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சருமம் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான பரு, தழும்புகள், தலைமுடி கொட்டுதல், சருமத்தின் நிற மங்குதல், வேரிகோஸ் வெயின், தோல் சுருக்கம், கரும்புள்ளிகள், உடல் பருமன் ஆகியவற்றிற்கான  பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனையும், இலவசமாக தேவைப்பட்ட மருந்துகளும் டாக்டர் தாஜ் சரும மற்றும் தலைமுடி மருத்துவமனைக் குழுவினரால் வழங்கப்பட்டன.  அதிநவீன கருவிகள் கொண்டு  தலைப் பொடுகு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 


இது போன்ற ஒரு மருத்துவ முகாம் கோயம்புத்தூரில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்காக சமீபத்தில் நடத்தப்பட்டது. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்காக இது போன்ற சிறப்பு முகாம் விரைவில் ரயில்வே பள்ளிகள் உள்ள ஈரோட்டில் நடத்தப்பட உள்ளது. 

No comments:

Post a Comment