Tuesday 22 December 2015

சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழுவின் 15வது கூட்டம் இன்று (22.12.2015) நடைபெற்றது.

இடமிருந்து வலம் முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு. ஆர்.எஸ்.சின்ஹா, 
 முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், உரையாற்றுகிறார்
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள்

சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழுவின் 15வது கூட்டம் இன்று (22.12.2015) சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு. ஆர்.எஸ்.சின்ஹா, முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், முதுநிலை இயக்க மேலாளர் திரு. .ஹரிகிருஷ்ணன், மற்றும் சேலம் கோட்ட துறை அதிகாரிகளுடன், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம், காங்கேயம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல்லில் இருந்து வந்திருந்த குழு உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், வந்திருந்தோரை வரவேற்ற போது, சேலம் கோட்டம் ரயில் நிலைய வளாகங்களில் தூய்மை மேம்பாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், குழு உறுப்பினர்கள் இந் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறும் கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில், சேலம் கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு, கோட்ட மேலாளர் என்ற முறையில் உறுப்பினர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அனைத்து ரயில் நிலையங்களிலும் ஊழியர் சங்கங்கள் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளதுடன, இனிமேல் அது போன்று சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என அந்த அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சேலம் கோட்டத்திற்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற,  வழக்கமான அலுவலக முறைகளுடன், மக்களின் பிரதிநிதிகளான எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏக்களை ரயில்வே கோட்ட மேலாளர் என்ற முறையில் நேரில் சந்தித்து இத் திட்டங்கள் நிறைவே மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்தார். சேலம் ரயில்நிலையத்தில் இரண்டாவது நுழைவு வாயில் அமைப்பதுடன் 5ம் நடைமேடைமற்றும் நடைமேம்பாலத்தை 5ம் நடைமேடை வரை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொன்னார். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ளது போன்று சேலம் ரயில் நிலையத்திலும் அனைத்து வசதிகளும் கொண்ட ரயில்நிலையக் கட்டிடம் 2வது நுழைவுவாயிலில் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். 

மேலும் அவர், கோயம்புத்தூரில் நவீன முறையிலான வட்டச்சுற்றுப்பாதை ரயில் சேவை மூலம், கோயம்புத்தூரின் முக்கிய பகுதிகளான மேட்டுப்பாளையம், வடகோயம்புத்தூர், கோயம்புத்தூர் ரயில் நிலையம், போத்தனூர், சிங்காநல்லூர் பகுதிகளை மின்தொடர் ரயில் சேவையால் இணைக்க ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.  இதனால் கோயம்புத்தூரின் முக்கிய பகுதிகள் இணைக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி பெருகும் என்றும், இது வருங்கால திட்டமாதலால், நிறைவேற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றும் சொன்னார்.

சேலம் கோட்டம் எடுத்து வரும் பயணிகள் வசதி மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், சேலம் கோட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 1, கோயம்புத்தூரில் 3, திருப்பூரில் 2, ஈரோட்டில் 2, கரூரில் 2, சேலம் டவுனில் 1, சின்ன சேலத்தில் 1, ஆத்தூரில் 1 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 15 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ரயில்நிலையங்களில் நாணயம், ரூபாய் நோட்டு கொண்டு இயங்கும் அதிநவீன 6 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், தெரிவித்ததுடன், வடகோயம்புத்தூரில் புதிய ரயில்நிலைய கட்டிடம் கட்டுப்பட்டுள்ளதையம், கோயம்புத்தூர், சேலம், ஈரோட, திருப்பூர், ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் தங்கும் அறைகள் கணிணி மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

குழு உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும், தற்போது அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி கீழ்க்கண்ட வசதிகள் வருங்காலத்தில் செய்யப்பட உள்ளதாகவும் திரு சுப்ரான்சு தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் 4, சேலத்தில் 2, ஈரோட்டில் 2, மொத்தம் 8 நகரும் மின் ஏணிகள், escalators திருப்பூரில் 2, கோயம்புத்தூரில் 1, ஈரோட்டில் 2. மொத்தம் 5 மின்தூக்கிகள் lifts

27 ரயில்நிலையங்களில் ரயில்பெட்டிகளின் வரிசைகாட்டும் போர்டுகள், ரயில் வரும் போகும் நேரம் காட்டும் போர்டுகள், பிளாட்பாரம் எண்காட்டும் போர்டுகள், மற்றும் ரயில்வே தகவல் அறியும் தொடுதிரைகள் அதிநவீன தொழில் நுட்பம் கொண்டு அமைத்தல்,

மோகனூர், சூளூர் ரோடு, ஏற்காடு, தாராபுரம், கோபிசெட்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களில் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள்

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் பயணிகள் அவசர மருத்துவ உதவி மையம்

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் முழுநீள விரைவு ரயில் பெட்டிகளை நிறுத்த வசதியாக 24 ரயில்பெட்டிகள் நிறுத்தும் நடைமேடை

பீளமேடு ரயில்நிலையத்தில் முழுநீள விரைவு ரயில் பெட்டிகளை நிறுத்த வசதியாக 24 ரயில்பெட்டிகள் நிறுத்தும் நடைமேடை

இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக்கழகத்தின் மூலம் கோயம்புத்தூரில் 12, சேலத்தில் 8, ஈரோட்டில் 10, திருப்பூரில் 4, கரூரில் 3, மேட்டுப்பாளையத்தில் 3 மொத்தம் 40 குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் 

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் ரயில்நிலையங்களில் வழக்கமான எடை பார்க்கும் கருவிகளுக்கு பதிலாக அதிநவீன பிஎம்ஐ காட்டும் கருவிகள்

கரூர் ரயில்நிலையத்தில், புதிய பயணிகள் தங்கும் அறைகள் இணையதள முன்பதிவு வசதியுடன் இம்மாத இறுதியில் துவக்கம்

இறுதியில் முதுநிலை இயக்க மேலாளர் திரு. .ஹரிகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். 

2 comments:

  1. All the things ok sir wethere their is no complaint against the catering or no complaints against catering.if so why it was not discussed in this meeting.

    ReplyDelete
  2. Please read as follows whether their is no complaints against the catering or no discussions was made in this meeting about the catering which is essential for the passengers of the train.

    ReplyDelete