Tuesday 28 March 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்டது


 



மின்சாரம் தாக்கி ஏற்படுகிற விபத்துகளை தவிர்க்கவும், ரயில்வே மின்அமைப்புகளின் அருகில் செல்வதில் உள்ள அபாயத்தை விளக்கியும், சேலம் கோட்ட மின்பிரிவு 28.03.2017 முதல் 31.03.2017 வரை மேற்கொள்ள உள்ள மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (28.03.2017)   சேலம் கோட்ட அலுவலகத்தில் இருந்து மின்பாதுகாப்பு பிரச்சார ஊர்தியை (பாதுகாப்பு ரதம்) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை மின் பொறியாளர் திரு. எம். பிரபாகரன், இதர துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பின்னர் ரயில்வே கோட்ட மேலாளர் பிரச்சார பிரசுரங்களை வெளியிட்டார்.  இப்பிரச்சார ஊர்தி மூலம் சுமார் 1,00,000 பேரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 10,000 துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 2500 கேலண்டர்களை விநியோகிக்கவும், பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 1000 ஜியோமெட்ரி பாக்ஸ்களை பள்ளிக்குழந்தைகளுக்கு விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் எச்சரிக்கைகளையும் தாண்டி, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் ரயில்வே வளாகங்களில் உள்ள 25000 வோல்ட் மின்சக்தி அமைப்புகளின் அருகில் செல்வதால் விபத்துக்கு உள்ளாகி வருவது தொடர்கிறது. பல நேரங்களில் உயிரிழப்பும். னர்.

நிகழ்ச்சியில் பேசுகையில் திரு ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் வருமுன் காக்கும் கொள்கையை நம்புவதாகவும், ரயில்வே மற்றும் சாலை உபயோகிப்பாளர்களை சந்தித்து பாதுகாப்பாக அவற்றை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதனால் பல்வேறு உயிர் மற்றும் பொருள் சேதத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சொன்னார்.  அத்துடன், 2017ம் ஆண்டில் 2017ம் ஆண்டில், சேலம் மார்க்கெட் ரயில்நிலையம் மற்றும் மேட்டூர் அணை ரயில்நிலையங்களில் இரு மின்விபத்துக்களில் இருவர் சிக்கி மின்அதிர்ச்சிக்கு ஆளாகி உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை தந்ததாகவும் சொன்னார். குழந்தைகளுக்கு பள்ளிகளில் அறநெறிக் கல்வியுடன் இத்தகு பாதுகாப்பு பற்றிய கல்வியும் தரப்பட்டால், அவர்களது வருங்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் என்றும், இத்தகு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் கோட்ட மின்பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார். 

No comments:

Post a Comment