திரு. ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தின் புதிய ரயில்வே கோட்ட மேலாளர்
திரு. ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தின் புதிய ரயில்வே கோட்ட மேலாளர்
திரு. ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தின் புதிய ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்ற பின்னர் முந்தைய கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்களுடன் கைகுலுக்குகிறார்.
திரு. ஹரி சங்கர் வர்மா, இன்று (26.04.2016) தெற்கு ரயில்வே
சேலம் கோட்டத்தின் ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அப் பொறுப்பேற்கும் 5வது கோட்ட மேலாளராவார். இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையை சேர்ந்த திரு.
வர்மா இந்திய ரயில்வேயில் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேயில் திரு.வர்மா
பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
அவரது பணிக்காலத்தில் பெரும் பகுதி போபால் கோட்டத்தில் இயக்க மேலாளர் மற்றும்
முதுநிலை இயக்க மேலாளர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
அங்கே பணியாற்றிய
காலத்தில் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம், போபால் ரயில்வே கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஹபீப்கஞ்ச்
நிசாமுத்தீன் விரைவு ரயில்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற முக்கிய காரணமாக
விளங்கியதுடன், புசாவல் நகரில் உள்ள ரயில்வே மண்டல பயிற்சிப் பள்ளியின் முதல்வராக பணியாற்றிய போது
அப்பள்ளி இந்திய ரயில்வேயிலேயே முதல்முறையாக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற பள்ளியாக
காரணமாக இருந்தார்.
மத்திய ரயில்வேயின்
மும்பை கோட்டத்தில் கூடுதல் கோட்ட மேலாளராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியுள்ள
திரு.வர்மா, மும்பை புறநகர் ரயில்சேவைகளில் காலந்தவறாமையை பெருமளவில் முன்னேற்ற
உதவினார். மத்திய ரயில்வேயின் தலைமை வணிக
மேலாளராக அவர் பணியாற்றிய போது நாக்பூரில் இந்திய ரயில்வேயில் முதன் முறையாக
தனியார் சரக்கு முனையம் அமைக்க முக்கிய காரணமாக இருந்தார்.
சேலம்
கோட்டத்தின் கோட்ட மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்னர் மத்திய ரயில்வேயின் தலைமை பயணிகள்
போக்குவரத்து மேலாளராக பணியாற்றிய போது, திரு. வர்மா அவர்கள் மேற்பார்வையில் தினசரி
பயணிகள் ரயில்களில் கூடுதலாக நிரந்தர அடிப்படையில் 238 ரயில்பெட்டிகள் இணைக்கப்பட்டு
அதிக எண்ணிக்கையில் நெடுந்தூர ரயில்கள் இயக்கி அதிக பயணிகள் பயணம் செய்ய உறுதுணையாக
இருந்தார்.
இவர் பல்வேறு பணி மற்றும் பயிற்சி நிமித்தமாக மலேசியா, சிங்கப்பூர்
மற்றும் சில அயல்நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
திரு வர்மா அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாட்டில் பெரும் ஆர்வம்
உடையவர்.
No comments:
Post a Comment