Wednesday 27 July 2016

தபால் நிலையங்களில் செயல்படும் அதிகமாக பயன்பாடு இல்லாத ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களை மூடுவது பற்றிய அறிவிப்பு


தபால் நிலையங்களில் இயங்கி வரும் கீழ்க்கண்ட ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள், ரயில்வே வாரியத்தின் விதிகளின் படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 25 பயணச்சீட்டுகளுக்கும் குறைவாக வாங்கப்பட்டு, போதிய பயன்பாடு இல்லாத காரணத்தால் அவை விரைவில் மூடப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகள் இதை கருத்தில் கொண்டு அருகில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்களுக்கு சென்று தங்களது ரயில் பயணச்சீட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 

·                     பள்ளிப்பாளையம் தபால் நிலையம் - நாமக்கல் மாவட்டம்
·                     அரவக்குறிச்சி தபால் நிலையம் - கரூர் மாவட்டம்
·                     இடப்பாடி தபால் நிலையம் - சேலம் மாவட்டம்
·                     திருச்செங்கோடு தபால் நிலையம் - நாமக்கல் மாவட்டம்‘
·                     ராசிபுரம் தபால் பிரிப்பு மையம்  - நாமக்கல் மாவட்டம்
·                     மல்லசமுத்த்திரம் தபால் நிலையம் - நாமக்கல் மாவட்டம்
·                     ஊத்தங்கல் தபால் பிரிப்பு நிலையம் - கிருஷ்ணகிரி மாவட்டம்

No comments:

Post a Comment