Wednesday 27 July 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் புதிய கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு




திரு சந்திரபால் அவர்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.  இந்திய பொருள்கட்டுப்பாட்டுத்துறை சேவையைச் சேர்ந்த திரு சந்திரபால் 1990ம் ஆண்டு இந்திய ரயில்வேப் பணியில் இணைந்தவர்.  சேலம் கோட்டத்தின் கூடுதல் ரயில்வே மேலாளராகப் பொறுப்பேற்கு முன்னர் ஹூப்ளியில் உள்ள தென்மேற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தலைமை பொருள் கட்டுப்பாட்டுத்துறை மேலாளராகப் பணியாற்றி வந்தார்.  இவர் கட்டுமானப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.  முன்னதாக வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே, சித்தரஞ்சன் இரயில் தொழிற்சாலை மற்றும் தென்மேற்கு ரயில்வேயில் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.  இதற்கு முன்னர் கூடுதல் ரயில்வே மேலாளராகப் பொறுப்பேற்றிருந்த திரு ரவிசேகர் சின்ஹா அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தலைமை பொருள் கட்டுப்பாட்டுத்துறை மேலாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment