Thursday 26 May 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ரயில்வே சேவை வார விழாவின் ஒரு பகுதியாக இன்று (26.05.2016) தூய்மை தினம் அனுசரிப்பு

 கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலையம் முன்பு அமையவிருக்கும் வாகன நிறுத்தக வரைபடத்தை பார்வையிடுகிறார்
 கோட்ட மேலாளர் திரு வர்மா சேலம் ரயில் நிலையம் 5வது நடைமேடையை பார்வையிடுகிறார்
 கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய குளிர் வசதி காத்திருப்பு அறையை பார்வையிடுகிறார்
  கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய குளிர் வசதி காத்திருப்பு அறையில் பயணிகளிடம் கருத்துக் கேட்கிறார்

  கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய பயணிகள் தங்கும்  அறையை பார்வையிடுகிறார்
கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய உணவகத்தின் சமையல் அறையை பார்வையிடுகிறார்

மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்களது வழி காட்டுதலின் படி, நாடங்கிலும் இந்திய ரயில்வேயால் அனுசரிக்கப்பட்டு வரும் பயணிகள் சேவை வாரத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று (26.05.2016) தூய்மை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

சேலம் ரயில்நிலையத்தில், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு. மா.விக்னவேலு அவர்கள் தலைமையில் ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள், சாரணசாரணியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களுடன் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகள், நடைமேம்பாலங்கள், காத்திருக்கும் அறைகள் மற்றும் ரயில்பெட்டிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் சேலம் ரயில்நிலையத்தில் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு பயணிகளிடம் ரயில் வளாக தூய்மை குறித்து கருத்து கேட்டறிந்தார்.  பயணிகள் சேலம் ரயில் நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.  சேலம் வழியாக செல்லும் ரயில்களிலும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த்தற்கு, திரு. வர்மா, ஈரோடு ரயில்நிலையம் ரயில் சுத்தப்படுத்தும் நிலையமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், நீண்ட தூர ரயில்களின் தூய்மைப்பணி அங்கு மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்தார். 

நடைமேடைகளை சுத்தப்படுத்தும் பணிகளை அவர்  பார்வையிட்டபோது, ஊழியர்கள் சுத்தம் செய்யப்பட்ட குப்பைகளை ரயில்தடத்தில் கொட்டியதை கண்டு, குப்பைகளை அகற்ற தனியாக கூடை உபயோகப்படுத்தி குப்பைகளை மாநகராட்சி ஒதுக்கியுள்ள இடங்களிலே கொண்டு போய் கொட்டுமாறு அறிவுறுத்தினார்.  குளிரூட்டப்பட்ட தங்கும் அறையினை பார்வையிட்டு பயணிகளிடம் உரையாடிய போது, சில பயணிகள் அங்கு அதிக வெயில் நேரத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதை தெரிவித்தனர்.  உடனே அவர் சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு. விஜு வின் அவர்களிடம் அருகிலுள்ள காலி அறையை தயார் செய்து குளிரூட்டப்பட்ட தங்கும் அறையை  நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அறிவுறுத்தினார்.

சேலம் ரயில் நிலையம் முன்னால் அமையவுள்ள பயணிகளை இறக்கி விட்டுச் செல்லும் வழியை சற்றே அகலப்படுத்தி ஒரே நேரத்தில் 2 கார்களை நிறுத்த வசதி செய்யுமாறு அவர் பொறியாளர்களை கேட்டுக் கொண்டார்.  சேலம் ரயில்நிலைய 3வது நடைமேடையை அவர் ஆய்வு செய்யும் போது அங்கு சுத்தப்படுத்தும் பொருட்கள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு சுகாதார ஆய்வாளருக்கு ஆணையிட்டார்.

பின்னர் அவர் சைவ மற்றும் அசைவ உணவகங்களையும், அங்குள்ள சமையலறைகளையும் பார்வையிட்டதுடன், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பயணிகளிடம் அங்குள்ள உணவின் தரம் மற்றும் சுத்தம் பற்றி கருத்து கேட்டார்.  பயணிகளும் அங்குள்ள உணவு பற்றி திருப்தி தெரிவித்தனர்.  உணவக மேலாளரிடம் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இயற்கைப் பொருள்களால் செய்யப்பட்ட உணவுத் தட்டுகளை உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.  


No comments:

Post a Comment