Tuesday 24 May 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் ரயில்களில் கோடைகால ரயில்களில் குற்றங்களை குறைக்க சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடு

சிறப்பு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரயிலில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்

ரயில்களில் திருட்டு, கொள்ளை மற்றும் சக பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பது போன்ற குற்றங்களை குறைக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் விழிப்புணர்வு பிரச்சாரம், இரவு நேர ரயில்களில் கண்காணிப்பை அதிகரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோடைகால ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்  வேளையில் அதை  பயன்படுத்தி நடக்க வாய்ப்புள்ள குற்றங்களை தவிர்க்க தெற்கு ரயில்வே சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் திரு. எஸ்.சி. பாரி அவர்களுடன் ஆலோசித்து, சிறப்பு ரயில்வே பாதுகாப்புப் படைக்குழு ஒன்றை சேலம் கோட்டத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் திரு. பி. ராஜ்மோகன் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் இந்த சிறப்புக் குழுவில் 90 ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை வீர்ர்கள் இருப்பார்கள். அவர்கள் போத்தனூர் மற்றும் ஈரோட்டில்  தங்கி இருந்து, ஜோலார்பேட்டை-சேலம்-கோயம்புத்தூர், ஈரோடு-கரூர் மற்றும் சேலம்-நாமக்கல்-கரூர் தடங்களில் சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக செல்லும் சுமார் 31 இரவு நேர ரயில்களில் சிறப்புக்கண்காணிப்பு மேற்கொள்வார்கள். இந்த தடங்களில் ஏப்ரல் 2016 வரை பதிவு பெற்றுள்ள 41 குற்றங்களில் ஜோலார்பேட்டை-சேலம்-கோயம்புத்தூர் மார்க்கத்தில் 11 குற்றங்கள் நடைபெற்றுள்ளதால், அந்த தடத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.  இந்த ரயில்களில் சிறப்புக் கண்காணிப்பு குழுவினர் பயணித்து அனுமதி இன்றி பயணம் செய்வோர் மற்றும் சமூக விரோதிகளை கண்காணித்து நகை பறித்தல், பயணிகளின் உடைமைகளை திருடுதல் மற்றும் பெண் பயணிகளுக்கு தொல்லை கொடுத்தல் போன்ற குற்றங்களை நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள்.       

ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர்  தவிர, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பணியாற்றும் குற்றக் கண்காணிப்பு மற்றும் தடுப்புக் குழுவினரும், இரவு நேர ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகள் பயமன்றி வந்து போவதற்கு உதவும் பொருட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள்.  


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா அவர்கள் ரயில் பயணிகள் இரவு நேர ரயில்களில் பயணிக்கும் போது விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லாமலும், ரயில்களின் கதவுகள் மற்றும் சன்னல்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்யாமலும் இருப்பதன் மூலமும் ரயில்வே நிர்வாகத்திற்கு குற்றங்களை தவிர்க்க உதவ இயலும் என்றும், அவர்கள் உடனடி காவல் உதவிக்கு கட்டணமற்ற தொலைபேசி எண்.182-யோ அல்லது ரயில்களில் பயணிக்கும் காவலர்களையோ அணுகுவதன் மூலமோ உடனடியாக உதவி பெற இயலும் என்றும் சொன்னார்.  

No comments:

Post a Comment