திரு ஜி ஜனார்த்தனன் மற்றும் திரு. எம். தாசன் (இடமிருந்து 1 மற்றும் 2) சேலம் கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்களிடம் காசோலையை வழங்குகிறார்கள்
சமீபத்தில்
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஈரோடு ரயில்வே உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மற்றும் மாணவர்கள்
தானாக முன்வந்து நிதி திரட்டினர். அவ்வாறு பெறப்பட்ட 82,521 ரூபாய்க்கான தமிழக முதல்வரின்
நிவாரண நிதிக்கான காசோலையை ஈரோடு ரயில்வே உயர்நிலைப்பள்ளியின் தாளாளரும் சேலம் ரயில்வே
கோட்ட பணியாளர் நல அதிகாரியுமான திரு. ஜி. ஜனார்த்தனன், மற்றும் ஈரோடு ரயில்வே உயர்நிலைப்பள்ளியின்
தலைமை ஆசிரியர் திரு. எம். தாசன், இருவரும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சுவிடம்,
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைப்பதற்காக ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment