திரு
அஜீத் சக்சேனா நேற்று 29,01,2016
தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
திரு. சக்சேனா ரூர்கி ஐஐடியில் கட்டுமானத் துறையில்
பொறியியல் பட்டத்துடன் முதுநிலை மேலாணமை (எம்பிஏ) பட்டமும் பெற்றவர். 1982ம் ஆண்டு இந்திய ரயில்வே சேவையில்
சேரு முன்னர் அவர் புதுச்சேரி அரசில் காரைக்கால் துணை ஆணையராக பணியாற்றி உள்ளார்.
இந்திய ரயில்வே போக்குவரத்து சேலையில் 1982ம் ஆண்டு
சேர்ந்த திரு. சக்சேனா மும்பை, ஹைதராபாத்,
மற்றும் கொல்கத்தாவில் மத்திய, மேற்கு,
தென்மத்திய, வடமத்திய ரயில்வேயில் பல்வேறு பொறுப்புகளில்
பணியாற்றி உள்ளார்.
2003ம் ஆண்டு அவர் ஜான்சியில் முதுநிலை வணிக மேலாளராக பணியாற்றிய போது இந்திய ரயில்வேயில்
முதன் முறையாக ரயில்வே உதவி தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்.
2006ம் ஆண்டு தெற்கு ரயில்வேயில் தலைமை போக்குவரத்து மேலாளராக சேர்ந்த திரு.
சக்சேனா, தலைமை வணிக மேலாளராக பொறுப்பேற்கு முன்னர்
தெற்கு ரயில்வே தலைமை கோருதல் அதிகாரி (Chief Claims Officer) ஆக பணியாற்றி வந்தார்.
No comments:
Post a Comment