கோயம்புத்தூர்
ரயில் நிலையத்தில் கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையினால் நடத்தப்படும் ரயில் பயணிகளுக்கான அவசர மருத்துவ உதவி மையம் நாளின் 24 மணி நேரமும் செயல்படும். இந்த மருத்துவ உதவி மையத்தில்
பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ரயில் பயணிகளுக்கு
முதலுதவி வழங்கி அவர்களை அவர்கள் விரும்பும் எந்த ஒரு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைப்பார்கள்.
அத்துடன் சாதாரண நோய்களுக்கும்
ரயில்பயணிகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும். இந்த மருத்துவ
உதவி மையத்தில் ஈசிஜி கருவி, மற்றும் இருதயத்துடிப்பு செயற்கையாக
அmளிக்கும் கருவி, அவசர கால மருந்துகள்
போன்றவை இருப்பதால் ரயில் பயணிகளுக்கு உடனடி மருத்துவ வசதி வழங்க இயலும். இத்தகு மருத்துவ உதவி மையங்கள் சேலம் கோட்டத்தின் சேலம், ஈரோடு, மற்றும் கரூர் ரயில் நிலையங்களில் முன்னரே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment