Tuesday 29 March 2016

ஈரோட்டில் ரயில்வே மருத்துவமனை புதிய கட்டிடம் இன்று திறப்பு

 திரு,சுப்ரான்சு அவர்கள் புதிய ரயில்வே மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்
விழாவில் கலந்து கொண்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள திரு.சுப்ரான்சு அவர்களுடன்

மருத்துவமைனயின் அழகிய உட்புறத்தோற்றம் 
ஈரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை இன்று (29.03.2016) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் எம் பிரசன்ன குமார், சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ,கலாநிதி, மற்றும் சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம். நரசிம்மம் மற்றும் இதர அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்ஈரோடு ரயில்நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே காலனியில் அமைந்துள்ள புதிய ரயில்வே மருத்துவமனை ரூ 5.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு மருத்துவமனையில், இன்டென்சிவ் கேர் மையம், பிரசவ மையம், அறுவை சிகிச்சை மையம், குழந்தைகள் பிரிவு, மற்றும் அதிநவீன லேபரோட்டரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதி நவீன மருத்துவ கருவிகள் சுமார் ரூ 45 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் தற்போது 60 படுக்கை வசதி உள்ளது. இது பின்னர் பெரிய அளவில் விரிவு படுத்தப்படும்

ஈரோட்டில் சேலம்  கோட்டத்தின் முக்கிய ரயில்வே அமைப்புகளான டீசல் எஞ்சின் பராமரிப்பு தொழிற்சாலை, மின் ரயில் எஞ்சின் பராமரிப்பு தொழிற்சாலை, ரயில்வே பள்ளிகள் போன்றவை இருப்பதாலும், சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் ஈரோட்டில் குடியிருப்பதாலும், இந்த ரயில்வே கோட்ட மருத்துவமனை ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ளதுமேலும், சேலம் கோட்டத்தின் பிற பகுதிகளான, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், கரூர் போன்ற இடங்களில் இருந்து சுமார் 10,250 ரயில்வே ஊழியர்கள் எளிதாக ரயில் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு ஈரோடு வந்து செல்ல முடியும்

திறப்பு விழாவில் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு ஈரோட்டில் ரயில்வே மருத்துவமனை சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்களுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், வருங்காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு பல்நோக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் பெரும் மருத்துவ மையமாக விரிவாக்கம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

விழாவில், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் மா.விக்னவேலு, முதுநிலை பொது மின் பொறியாளர் திரு. எஸ். ரெங்கராஜன், கோட்டப் பொறியாளர் திரு. நந்தகோபால் உள்ளிட்ட பல சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment