Wednesday 9 March 2016

ரயில்களில் பார்சல்கள் புக்கிங் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை

ரயில்களில் பார்சல்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மோட்டார்வண்டிகளை புக்கிங் செய்யும் போது, அங்கீகரிக்கப்படாத இடைத்தரகர்கள் தலையிட்டு, பேக்கிங், ஏற்றுதல், இறக்குதல் என்ற பெயரில் ரயில்வே நிர்ணயித்துள்ள தொகையை விட அதிகமாக வசூலிப்பதாக  தெற்கு ரயில்வே வணிகவியல் பிரிவுக்கு புகார்கள் வந்துள்ளன.


இத்தகு இடைத்தரகர்களின் தலையீட்டை தவிர்க்க, தெற்கு ரயில்வே அத்தகு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதுடன், அடிக்கடி பார்சல் அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளதுசேலம் கோட்டத்தில் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் இத்தகு  பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிட்டால், உடனடியாக அவர்கள் 0427-2330 297 என்ற எண்ணில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களது பெயர், மொபைல் எண், மற்றும் இதில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர் யாராவது இருந்தால் அவர்களது பெயர் மற்றும் இதர விபரங்களை தெரிவித்தால், உடனடியாக நடவடிகக்கை எடுக்கப்படும்

No comments:

Post a Comment