Friday 18 November 2016

02.02.2017 வரை நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் தாமதம்



திருமங்கலம் விருதுநகர் இடையே ரயில்தடப் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் எண்.56319 02.02.2017 வரையில் 88 நாட்களுக்கு தாமதமாக திண்டுக்கல் வந்து சேரும் என்று மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. இதனால் மதியம் 2.25க்கு பதிலாக 3.25க்கு திண்டுக்கல் தாமதமாக வந்து சேரும் இந்த ரயில் இரவு 8.50க்கு பதிலாக 9.50க்கு கோயம்புத்தூர் வந்து சேரும். வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் இது போன்ற தாமதமாக வந்து செல்வதால், பயணிகள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment