Wednesday 9 November 2016

முள்ளுவாடி லெவல்கிராசிங் கேட் வழியாக பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி





Warning Boards placed near the Mulluvadi LC Gate

இன்று சில ஊடகங்களில் முள்ளுவாடி லெவல்கிராசிங் கேட் வழியாக கார், கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கடந்து செல்ல சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது தவறான தகவல் ஆகும்.

அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கேட்டுக் கொண்ட படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல அனுமதித்துள்ளார்.  இது குறித்து லெவல்சிராசிங் கேட்டின் இருபுறமும் எச்சரிக்கைப் பலகைகளும் ரயில்வே நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளன.


எனவே, முள்ளுவாடி லெவல்கிராசிங் கேட் வழியாக பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால், இதர வாகனங்கள் அந்த வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது என்பதும், அதை மீறி அவ்வழியாக செல்ல முயலும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வாறு செல்பவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  

No comments:

Post a Comment