Wednesday 16 November 2016

ஈரோடு சென்னை எழும்பூர் பகல்நேர சிறப்பு ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு


சேலம் விருத்தாசலம் பகுதியில் உள்ள பயணிகளின் நீண்டநாள் வேண்டுகோளுக்கிணங்க அறிமுகம் செய்யப்பட்ட சேலம் வழியிலான ஈரோடு சென்னை எழும்பூர் பகல்நேர சிறப்பு ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சராசரியாக 20 சதவீத இருக்கைகள் மட்டுமே புக்கிங் செய்யப்பட்டு பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன. எனவே, ரயில் பயணிகள் இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே, இந்த ரயிலை தொடர்ந்து இயக்குவது பற்றியோ, அல்லது இதே ரயிலை வழக்கமான ரயில் சேவையாக மாற்றுவது குறித்தோ ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க இயலும். இல்லாவிட்டால், இந்த ரயில்சேவையை நிறுத்துவது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க நேரிடும். 

No comments:

Post a Comment