Monday 14 November 2016

போதனூர் பொள்ளாச்சி புதிய அகல ரயில் பாதை பணிகள் நடை பெற்று வரும் இடத்தில் பொதுமக்கள் அருகில் செல்லாமல் இருக்க வேண்டுகோள்




போதனூர் பொள்ளாச்சி தடத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இதற்காக ரயில் தட இயந்திரங்கள், சரளை கற்கள் மற்றும் ரயில் தடங்களை ஏற்றி வரும் ரயில்கள் மற்றும் லாரிகள் இயக்கம் பெரும் எண்ணிக்கையில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த இடங்களில் பொதுமக்கள் நடமாடுவதும் ரயில் தடங்களை அனுமதியற்ற இடங்களில் கடப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தகு நடமாட்டம் அவர்களுக்கு காயம் மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய வாய்ப்பு உள்ளதால் தடப்பணி நடைபெறும் இடங்களில் தடத்தின் அருகில் செல்லாமல் இருக்கும் படியும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் ரயில் தடத்தை கடக்காமல் தவிர்க்கும் படியும் இதன் மூலம் கேட்டுக் கொள்ள படுகிறது.

No comments:

Post a Comment