Wednesday 30 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சேலம் விருத்தாசலம் தடத்தில் ரயில்தடத்தை அசுத்தப் படுத்துவோர் மீது நாளை (02.12.2016) முதல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை



இன்று சேலம் விருத்தாசலம் தடத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா ஆய்வு செய்த போது, சேலம் டவுன் மின்னாம்பள்ளி ரயில்நிலையங்கள் அருகே ரயில்தடத்தை பொதுமக்கள் திறந்த வெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இந்திய ரயில்வே சட்டம் 1989ன் படி, ரயில்வேக்கு சொந்தமான (ரயில்தடங்கள் உட்பட) இடங்களை அசுத்தப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும், இந்தக் குற்றத்தை புரிவோர் மீது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

இவ்வாறு ரயில்தடங்களை அசுத்தப்படுத்துவது சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமன்றி, ரயில்தடங்கள் விரைவில் துருப்பிடித்து ரயில் இயக்கப் பாதுகாப்புக்கே சவாலாகவும் முடியும். அது மட்டுமன்றி, ரயில்தடங்களில் இவ்வாறு அசுத்தப்படுத்துவோர்  மீது ரயில் மோதி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.   பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டும், இவ்வாறு அசுத்தப்படுத்துவது தொடர்வது நடவடிக்கைக்குரியது.  


எனவே, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா நாளை (02.12.2016) முதல் அவ்வாறு அசுத்தப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்எனவே, பொதுமக்கள் ரயில்தடங்களை அசுத்தப்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செய்வோர் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 500 ரூபாய்கள் வரை அவர்களிடம் அபராதமாய் வசூலிக்கப்படுவதுடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புண்டு

No comments:

Post a Comment