Friday 18 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து ரயில்நிலையங்களிலும் முழுமையான பயணச்சீட்டு பரிசோதனை



தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு 2016 நவம்பர் 20ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும், அனைத்து பயணிகள் ரயில்களிலும், முழுமையான பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. பயணிகள் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதையும், தகுந்த நடைமேடைச்சீட்டு இல்லாமல் ரயில்நிலையங்களில் பிரவேசிப்பதையும் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  

No comments:

Post a Comment