Friday 18 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் புதிய முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பொறுப்பேற்பு


திரு பெருமாள் நந்தலால்,  16.11.2016 அன்று சேலம் கோட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.  இந்திய ரயில்வே பொறியியல் சேவையை சார்ந்த திரு நந்தலால் இந்திய ரயில்வேயில் 2007ம் ஆண்டு பணியில் சேர்ந்து தெற்கு ரயில்வேயில், உதவி கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர், மற்றும் முதுநிலை கோட்டப் பொறியாளராக சேலம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் பணியாற்றியுள்ளார்.  சிவில் எஞ்சினியரிங்கில் முதுநிலை (எம்.டெக்) பட்டம் பெற்றுள்ள திரு நந்தலால் சேலம் கோட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமுன்னர் பாலக்காடு கோட்டத்தின் கிழக்குப் பகுதி முதுநிலை கோட்டப் பொறியாளராக பொறுப்பு வகித்தவர். அவருக்கு முன் சேலம் கோட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளராக பதவி வகித்து வந்த திரு மா.விக்னவேலு அவர்கள், சொந்த வேண்டுகோளின் அடிப்படையில் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment